இங்கிலாந்தில் ஊரடங்கின் உத்தரவு அமலில் உள்ளது. எனவே மக்கள் வீட்டை விட்டு வெளியை வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதர்போல் உடையணிந்து பதுங்கி பதுங்கி ஒருவர் வீதியில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஹெர்ட்ஃபோர்டுஷைர்:-
இங்கிலாந்தில் ஹெர்ட்ஃபோர்டுஷைர் (Hertfordshire) அருகே ஸ்டீவனேஜ் (Stevenage) நகரில் நிக்கோலஸ் முர்ரே – மேட்லின் தம்பதி வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகே ஒருவர் தலை முதல் கால் வரை பசுமையான புதர்களால் மறைத்து வெளியே உலவும் காட்சியை படம் பிடித்துள்ளனர்.
இந்த நபர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் கண்களில் படாத வகையில் சாலையோரம் உள்ள புதர்கள் அருகே மறைந்து மறைந்து சாலையை கடந்து செல்கிறார். சிறிது நேரத்தில் பொருள் ஒன்றை வாங்கி வந்தார். அவர் அணிந்திருந்த உடை மற்றும் உடல் பாவனைகள் மூலம் புதரை போலவே உள்ளார். இந்நிலையில், இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.