லங்காஷயர்:-
இங்கிலாந்தில் கொரோனா நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில் லங்காஷயரிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இளைஞர்கள் இருவர் தங்கள் கைகளை நாக்கால் நக்கியும் அதை அங்கு உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பதனப் பெட்டியின் கைப்பிடியில் துடைத்தும் வேறு சில உணவுப் பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இங்கிலாந்தின் லங்காஷயர் நகரிலுள்ள செயின்ஸ்பரி (Sainsbury’s store) என்ற சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இளைஞர்கள் இருவர் தங்களது கைகளை நாக்கால் நக்கியும் அவற்றை அங்குள்ள உணவுப் பொருட்கள் மற்றும் இறைச்சி ஆகியவற்றின் மீது துடைத்தும் உள்ளனர்.
மேலும், வேறு சில உணவுப்பொருட்களை தங்களது நாக்கால் நக்கியும் உள்ளனர் இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து லங்காஷயர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் மார்டின் கூறுகையில்:-
இந்த சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பொருட்கள் முழுவதுமாக கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த சேதபடுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் மற்ற சாதாரண நாட்களில் வேண்டுமானால் வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் தற்போது உள்ள இக்கட்டான சூழலில் இதுபோன்ற செயல்களில் மிகவும் கண்டிக்கத்தக்கது, தண்டனைக்குரியது.
மக்கள் பலர் உணவு பொருட்கள் இல்லாமல் அல்லாடி வரும் சூழ்நிலையில், இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளது நிச்சயம் தண்டனைக்குரிய குற்றம் என்றார்.