உலகம்

20 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை..13 வாரங்களில் உயிரிழந்த அவலம்.. பதற வைக்கும் காரணம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரித்தானியாவில் 20 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தை 13 வாரங்களிலேயே மரணமடைந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

பிரித்தானியாவின் நார்போல்க் நகரத்தை சேர்ந்த டாம்மி ஐரீசன் என்பவருக்கு 20 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அதனுடன் பல பிரச்சனைகளும் தோன்ற உடைந்துபோனார் தாய்.

வில்பர் என பெயர் சூட்டப்பட்ட அந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டு ஐசியூ-வில் வைத்து கண்காணிக்கப்பட்டான். ஆனால் திடீரென குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட மூளை கடுமையான பாதிப்புக்குள்ளானது.

ALSO READ  "ஒரே ட்வீட்.....ஒரு லட்சம் கோடி அபேஸ்"; வருத்தத்தில் எலான் மாஸ்க் !

இந்நிலையில் 13 வாரங்கள் கடந்த நிலையில் குழந்தை மரணத்தை தழுவியது.

அத்தனை நாட்களும் குழந்தையை விட்டு பிரியாத டாம்மி ஐரீசன், முதல்முறையாக இறந்த பின்பு வில்பரை அணைத்துக்கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தார். கண்ணீர் விட்டு கதறி அழ, அதனை பார்த்த ஒவ்வொருவரும் தங்கள் குழந்தையாக எண்ணி சோகத்தின் எல்லைக்கே சென்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடத்தல்காரர்களிடம் இருந்து ஹீரோவாக மாறி கோடீஸ்வர தந்தையை மீட்க தனயன்… 

naveen santhakumar

தொலைந்து போய் ஐந்தாண்டுகள் கழித்து கிடைத்த பூனை- உரிமையாளர் நிகழ்ச்சி

Admin

ஆப்கனிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரர்- தாலிபன்கள் அறிவிப்பு !

naveen santhakumar