பிரித்தானியாவில் 20 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தை 13 வாரங்களிலேயே மரணமடைந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவின் நார்போல்க் நகரத்தை சேர்ந்த டாம்மி ஐரீசன் என்பவருக்கு 20 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அதனுடன் பல பிரச்சனைகளும் தோன்ற உடைந்துபோனார் தாய்.
வில்பர் என பெயர் சூட்டப்பட்ட அந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டு ஐசியூ-வில் வைத்து கண்காணிக்கப்பட்டான். ஆனால் திடீரென குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட மூளை கடுமையான பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில் 13 வாரங்கள் கடந்த நிலையில் குழந்தை மரணத்தை தழுவியது.
அத்தனை நாட்களும் குழந்தையை விட்டு பிரியாத டாம்மி ஐரீசன், முதல்முறையாக இறந்த பின்பு வில்பரை அணைத்துக்கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தார். கண்ணீர் விட்டு கதறி அழ, அதனை பார்த்த ஒவ்வொருவரும் தங்கள் குழந்தையாக எண்ணி சோகத்தின் எல்லைக்கே சென்றனர்.