தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இலங்கையிலுள்ள வட மாகாணத்திலும் திருகோணமலை பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தப் பகுதிகளில் நாளை காலை 7 மணி வரை அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த பகுதியில் சுமார் 150 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .ஆகையால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.
அதேபோல மத்திய மாகாணம் அனுராதபுரம் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைபொழிவு இருக்கக்கூடும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.