லண்டன்:-
கடந்த வாரம் புதன்கிழமை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-க்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது.
இளவரசர் சார்லஸ் இரண்டு வாரங்களுக்கு முன் மொனாகோ (Monaco) நாட்டின் இளவரசர் ஆல்பர்ட் (Prince Albert II) சந்தித்தார், அவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு நெருக்கமான ஊழியர் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பிரிட்டிஷ் அரசி எலிசபெத்திற்கு நெருக்கமான ஊழியர் மேலும் தினமும் அரசியை சந்திக்கும் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஊழியர் குறித்த வேறு விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து அரச குடும்பத்திற்கு பணிவிடை செய்யும் அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை வேறு யாருக்கும் பதிப்பு உறுதியாகவில்லை.
தற்பொழுது பிரிட்டன் அரசி எலிசபெத் (93) தனது கணவர் பிலிப் (98) (Prince Philip) உடன் வின்ட்சர் (Windsor) அரண்மனையில் உள்ளார் என்று பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இளவரசர் சார்லஸ் தற்பொழுது ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.