தமிழ்நாடு:-
கொரோனா வைரஸ் கட்டுபடுத்த முடியாத பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதனிடையே கொரோனா பாதிப்பால் பல கண்ணீரை வரவழைக்கும் சம்பவங்களும் நிகழ்கிறது.
தற்போது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வீடியோ காலில் பேசும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இது அனைவரையும் கலங்கச்செய்துள்ளது.
இந்த வீடியோ காட்சியில் தந்தையிடம் பேசும், மகள் அழுகையை அடக்கமுடியாமல் அழுதுகொண்டே பேசுகின்றார். தந்தை தனது மகளுக்கு சமாதானம் கூறிவிட்டு, குடிப்பதற்கு சுடுதண்ணீர் பயன்படுத்துமாறு அறிவுரை கூறுகிறார்.
இதனை கேட்டுக்கொண்ட மகள் அழுகையை கட்டுபடுத்த முடியாமல் அழுதுகொண்ட இருக்க, அம்மா என்று அப்பா கேட்கிறார்… பக்கத்தில் இருக்கிறாங்க என்று சிறுமி கூறுகின்றார். இக்காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களின் குடும்பம் படும் அவஸ்தையினை இக்காட்சி நமக்கு உணர்த்துகிறது.