காபுல் :
தாலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்த 2 வாரங்களாக ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதியை ஆக்கிரமித்து அங்கு ஆயுதமேந்தி தாக்குதல் நடத்தி வருகின்றது.தாலிபான் பயங்கரவாத அமைப்பு உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், இதன் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
தற்போது ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் அதன் நட்பு நாடுகளையும் தாலிபான் பயங்கரவாத அமைப்பு மிரட்டி வருகிறது. முன்னதாக துருக்கி ஆப்கானிஸ்தானுக்கு உதவ முன்வந்தது.ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரில் உள்ள முக்கிய விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அளிக்க துருக்கி அரசு முன்வந்தது.
இதனையடுத்து தாலிபான் அமைப்பு கடும் அதிருப்தி அடைந்தது. தற்போது ஆப்கானிஸ்தானுக்கு உதவ முன்வரும் தாலிபான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் துருக்கி கடும் பின்விளைவை சந்திக்க நேரிடும், இது தங்களது உள்நாட்டு விவகாரம் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.