தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்திருந்தது. ஆனால் தொற்று குறைந்தபாடு இல்லை
அதனையடுத்து மேலும் சில கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. பலசரக்கு, மளிகை, காய்கறி கடைகள் மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் காலை 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி என உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் மே 20ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்த வித கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தது. அதனையடுத்து சமூக ஆர்வலர்கள் இது குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது. இது நாளைமுதல் மே 20 தேதி வரை அமலில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.