உலகம்

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்….உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீஜிங்:

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி இரு நாடுகளின் படைகளும் கல்வான் பள்ளத்தாக்கில் கடுமையாக மோதிக்கொண்டன. இதில், இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. 

இந்த மோதலில் சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறைந்தது 30 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இந்தியா கூறியது.45 சீன வீரர்கள் இறந்திருப்பதாக ரஷியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.ஆனால், உயிரிழப்பு ஏற்பட்டதாக சீனா ஒப்புக்கொள்ளவில்லை.

ALSO READ  ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்கள் அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்

இந்நிலையில் முதல் முறையாக சீன அரசு உயிரிழப்பை ஒப்புக்கொண்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனா தரப்பில் அதிகாரிகள், வீரர்கள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்திருப்பதாக சீன ராணுவம் இன்று கூறியுள்ளது.உயிரிழந்ததவர்களுக்கு சீன மத்திய ராணுவ ஆணையம் மரியாதை செலுத்தி கௌரவித்ததாகவும், சீன ராணுவத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான பி.எல்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ட்ரம்ப் கூறிய ஐடியா… விளாசி எடுக்கும் மருத்துவர்கள்…

naveen santhakumar

பாலியல் பலாத்கார முயற்சி – பெண்ணை காப்பாற்றிய கொரோனா வைரஸ்

Admin

அமெரிக்காவில் சிங்கம், புலி, சிறுத்தை, பூனைகள் என வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகளுக்கும் கொரானா….

naveen santhakumar