தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டெல்லி:
இந்தோனேஷியா மற்றும் அல்பேனியா நாடுகளுக்கு புதிய இந்திய தூதர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடான அல்பேனியாவிற்கு புதிய இந்தியத் தூதராக ராகுல் ஸ்ரீவத்சவா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவிற்கு புதிய இந்திய தூதராக மனோஜ்குமார் பார்தி நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு இந்திய அயலக பணி அதிகாரியாக தேர்ச்சி பெற்ற ராகுல் ஸ்ரீவத்சவா, தற்பொழுது ருமேனியா நாட்டின் இந்திய தூதராக பணியாற்றி வருகிறார்.
1988 ஆம் ஆண்டு இந்திய அயலக பணி அதிகாரியாக தேர்ச்சி பெற்ற மனோஜ்குமார் பார்தி, தற்பொழுது இந்திய வெளியுறவுத் துறையின் சிறப்பு செயலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.