எல்லிசே:
ஐஸ்லாந்து அருகே எல்லிசே தீவில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக யாருமே வசிக்காத உலகத்தின் மிக தனிமையான வீடு தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடு ஐஸ்லாந்திற்கு தெற்கே உள்ள ஒரு தொலைதூர தீவான எலிசே தீவில் அமைந்துள்ளது.இன்று வெறிச்சோடி காணப்படும் இவ்விடத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து குடும்பங்கள் வசித்து வந்ததாம்.
இங்கு வாழ்ந்த குடும்பங்கள் மீன்பிடித்தல், வேட்டையாடுதல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தன. கடைசியாக இந்த தீவில் 1930-களில் வாழ்ந்தார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அப்போதிருந்தே இந்த இடம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இங்குள்ள இந்த தனிமை வீடு 1950-களில் எலிசே வேட்டை சங்கத்தால் கட்டப்பட்டது.பஃபின்கள் எனப்படும் ஒருவகை பறவைகளை வேட்டையாடுவதற்காக வேட்டையாளர்கள் இங்கு வந்துள்ளனர். இந்த வீட்டில் மின்சாரமோ, நீர் மற்றும் பிளம்பிங் போன்ற வசதிகளோ இல்லை. ஆனால் இங்கு ஒரு இயற்கை மழைநீர் சேகரிக்கும் முறையால் நீர் சேகரிக்கப்படுகிறது.
பிரபல பாடகர் பிஜோர்க்கிற்கு இந்த தீவு பரிசாக வழங்கப்பட்டதாகவும், கோடீஸ்வரர் ஒருவர் இந்தத் தீவை வாங்கி இப்போது அங்கு வசிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.ஆனால் இவை எதுவும் உண்மை இல்லை. உண்மையில், இந்த வீடு இன்றும் தீவில் வேட்டையாடும் மக்களுக்கு தங்குமிடமாக விளங்குகிறது.தற்போது இந்த தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.