உலகம்

வைரலாகும் உலகின் மர்மமான தனிமை வீடு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எல்லிசே:

ஐஸ்லாந்து அருகே எல்லிசே தீவில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக யாருமே வசிக்காத உலகத்தின் மிக தனிமையான வீடு தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

இந்த வீடு ஐஸ்லாந்திற்கு தெற்கே உள்ள ஒரு தொலைதூர தீவான எலிசே தீவில் அமைந்துள்ளது.இன்று வெறிச்சோடி காணப்படும் இவ்விடத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து குடும்பங்கள் வசித்து வந்ததாம்.

இங்கு வாழ்ந்த குடும்பங்கள் மீன்பிடித்தல், வேட்டையாடுதல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தன. கடைசியாக இந்த தீவில் 1930-களில் வாழ்ந்தார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அப்போதிருந்தே இந்த இடம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இங்குள்ள இந்த தனிமை வீடு 1950-களில் எலிசே வேட்டை சங்கத்தால் கட்டப்பட்டது.பஃபின்கள் எனப்படும் ஒருவகை பறவைகளை வேட்டையாடுவதற்காக வேட்டையாளர்கள் இங்கு வந்துள்ளனர். இந்த வீட்டில் மின்சாரமோ, நீர் மற்றும் பிளம்பிங் போன்ற வசதிகளோ இல்லை. ஆனால் இங்கு ஒரு இயற்கை மழைநீர் சேகரிக்கும் முறையால் நீர் சேகரிக்கப்படுகிறது.

ALSO READ  கொரோனாவிற்கு அடுத்து குரங்கு பி வைரஸ்…! சீனாவில் தொடங்கிய புது இன்னிங்ஸ்..!

பிரபல பாடகர் பிஜோர்க்கிற்கு இந்த தீவு பரிசாக வழங்கப்பட்டதாகவும், கோடீஸ்வரர் ஒருவர் இந்தத் தீவை வாங்கி இப்போது அங்கு வசிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.ஆனால்  இவை எதுவும் உண்மை இல்லை. உண்மையில், இந்த வீடு இன்றும் தீவில் வேட்டையாடும் மக்களுக்கு தங்குமிடமாக விளங்குகிறது.தற்போது இந்த தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்கா-தலிபான்கள் இடையே கையெழுத்தாகிறது அமைதி ஒப்பந்தம்- இந்தியா பங்கேற்ப்பு..!!!!

naveen santhakumar

மூளை அறுவை சிகிச்சை செய்யும் போது வயலின் வாசித்த பெண்.. நம்பவே முடியாத வீடியோ காட்சிகள் இதோ.!!!

naveen santhakumar

உலகம் முழுவதும் களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Admin