இந்தியாவில் 8 மணி நேரமாக உள்ள சராசரி வேலை நேரத்தை 9 மணி நேரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக பின்லாந்தின் இளம் பெண் பிரதமரான சன்னா மரீன் வாரத்தில் 4 நாட்கள் 6 மணி நேரம் மட்டும் பணியாற்றினால் போதும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு மக்களுக்கு முன்மொழிந்துள்ளார். இந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தொழிலாளர்கள் தங்களது விடுமுறை காலத்தையும் வேலை நாட்களில் மிச்சமாகும் நேரத்தையும் தன்குடும்பத்தாருடன் கழிக்க ஏதுவாக அமையும். இதனால் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் என சன்னா மரீன் கூறியுள்ளார்.
சன்னா மரீன் கூறியுள்ள இந்த புதிய திட்டம் தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரீன் உலகின் இளம்பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.