லண்டன்,
இறப்பு என்பது அத்தனை எளிதில் நாம் பேசக் கூடிய விஷயம் அல்ல. நாம் அதை பற்றி பேசாமல் இருப்பதுமில்லை. ஆனாலும் இறப்பை சந்தித்து தான் ஆக வேண்டும்.
இது தொடர்பாக லண்டனில் சவப்பெட்டி கிளப் (Coffin Club) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கிளப்பில் இறப்பதற்கு பின்னர் இறுதி சடங்குகள் எவ்வாறு நடத்தப்படும் என்பதை இறப்பதற்கு முன்னரே நமக்கு டெமான்ஸ்ட்ரேட் செய்கிறார்கள். அதனால் இந்த சவப்பெட்டி கிளப்பிற்கு வரும் மக்கள் தங்கள் இறந்த பிறகு எவ்வாறு இறுதி சடங்கு நடக்கும் என்பதை அறிந்து கொள்கின்றனர்.
அதோடு இங்கு வரும் மக்கள் சவப்பெட்டி செய்வது எப்படி என்பது குறித்து கொள்கின்றனர். இதற்கு கிளப்பில் உள்ளவர்கள் ஆலோசனையும் உதவிகளும் வழங்குகிறார்கள்.
அதனால் இந்த கிளப்பிற்கு வரும் மக்கள் தாங்களாகவே சவப் பெட்டிகளை செய்துகொள்கிறார்கள்.
இறந்ததற்கு பிறகு அவர்கள் மீது போர்த்தப்படும் துணி உட்பட அனைத்தையும் பற்றி விளக்குகிறார்கள்.
எல்லாமும் வணிக மயமான இன்றைய காலகட்டத்தில் மரணத்தையும் வணிகம் ஆக்கிவிட்டார்கள் என்பதே இந்த செய்தியை நமக்கு உணர்த்துகிறது.