மருத்துவம்

வெற்றி தரும் வெற்றிலை…!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெத்தல பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய தமிழ்ச் சமூகம்.

தமிழ் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது “தாம்பூலம்” எனப்படும் வெற்றிலை,பாக்கு.

தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு. வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.

வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் கேன்சர் இல்லை, சர்க்கரைவியாதி இல்லை, இதயநோய்கள் இல்லை முக்கியமா மலட்டுத்தன்மை அறவே இல்லை.

ஆக, வெற்றிலைபாக்கு என்பது பல நோய்களை தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன். கலாச்சார சீரழிவும், அந்நிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தை கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலையவிட்டிருக்கிறது.

வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை இன்று கருத்தரிப்பு மையம்களை (Fertility Centre) நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

ALSO READ  தரையில் அமர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

வாயில் கேன்சர் வந்திரும், பல்லு கரை போகவே போகாது,தவிர டேய் இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டுக்கிட்டு என சொல்லி சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்விட்டது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்து சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனை பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பி விட வேண்டும் என்றும், மூணாவது ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், தாம்பூலமா அப்புடின்னா என கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது.

பெருகி வரும் ஆண் மலட்டு தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.

ALSO READ  குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்ட பெண்கள் : டாக்டர் செய்த காரியம்

வெற்றிலையில் உள்ள Hydroxy chavicol எனும் Phenol compound ஆனது ஆண்களின் prostate ஐ வலுப்படுத்துகிறது.

மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது, விதை பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு ஜ Prostate இல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது motility உண்டாகிறது.

IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம்.

மலச்சிக்கலா தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கை சேர், வாய் நாற்றமா வெற்றிலையை சேர், வீரியம் வேண்டுமா சாதிக்காய் சேர் என சொன்ன சமுகம் இன்று Infertility center களில் முடங்கி கிடக்கிறது.

அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூல மகத்துவத்தை எடுத்து உரைப்போம்….


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீன ரேப்பிட் டெஸ்ட் கிட்கள் சொதப்பல்… அதில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம்: ஐ.சி.எம்.ஆர்….

naveen santhakumar

தரையில் அமர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Admin

நீட் தேர்வுக்கு ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம்

News Editor