லக்ஸம்பர்க்:-
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று லக்ஸம்பர்க் உலகின் முதல் நாடாக பொதுபோக்குவரத்தை இலவசமாக அறிவித்துள்ளது.
இந்த நாட்டில் சாலைகளை பெருமளவு கார்களே ஆக்கிரமிக்கின்றன. இதனால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இங்கு கார்கள் வணிக ரீதியிலான பயணத்துக்கு 47%, ஓய்வு நேர போக்குவரத்துக்கு (Liesure) 71% பயன்படுத்தப்படுகிறது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200301-WA0028.jpg)
மக்களால் 32 % பயணங்களுக்கு மட்டுமே பஸ் பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து 19 % பயணங்களுக்கு மட்டுமே ரெயிலை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஃப்ரான்ஸோடு ஒப்பிடுகையில் 69% பேர் பொதுபோக்குவரத்தையே பயன்படுத்துகிறார்கள்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200301-WA0029.jpg)
இந்நிலையில், சாலைகளில் கார்களால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வருகிற வகையில், இந்த நாட்டில் இலவச பொது போக்குவரத்து முறை, நாடு முழுவதும் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ரெயில்களில் முதல் வகுப்பில் பயணிக்கவும், பஸ்களில் இரவு நேர பயணத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொருவரும் ஆண்டுக்கு சுமார்1000 யூரோக்கள் (சுமார் ரூ.8 ஆயிரம்) வரை லக்ஸம்பர்க் மக்களால் சேமிக்க முடியும்.