புதுடெல்லி:-
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் முழுவதும் இந்தியாவை சேர்ந்தவையே. அவற்றில் எந்த ஒரு பகுதியையும் உரிமை கொண்டாட பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை. உடனடியாக பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகளை காலி செய்ய வேண்டும் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள கில்கிட்-பல்டிஸ்டன் (Gilgit Baltistan) பகுதிகளில் 2018-ம் ஆண்டு சட்ட திருத்துவதற்கு அனுமதி அளித்து அந்த பகுதிகளில் தேர்தல் நடத்த அனுமதி அளித்திருந்தது.
இதனால் வெகுண்டெழுந்த இந்தியா இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக கண்டித்து இருந்தது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய வையும் முழுக்கமுழுக்க இந்தியாவிற்கு சொந்தமானவை இந்தப் பகுதிகளை சொந்தம் கொண்டாட பாகிஸ்தான் அரசுக்கோ அல்லது பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்றத்திற்கு எந்தவித உரிமையும் இல்லை. பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் பாகிஸ்தான் மேற்கொள்ளக் கூடாது.
மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளில் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.