நடிகை கங்கனா ரணாவத் அமெரிக்கா அதிபர் டிரம்ப் க்கு ஆதரவாக ட்விட்டரில் கறுத்தது தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணாவத் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். அவ்வப்போது ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் குறித்து சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்திருந்தார் கங்கணா. இதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரைக் கடுமையாகச் சாடி வந்தனர்.
அதிபர் ட்ரம்ப், வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதாக கூறி அவரது ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு வருவதால் அவரின் தனிப்பட்ட முறையிலான ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கங்கனா ரனாவத் ட்வீட் செய்துள்ளார். அதில், “இஸ்லாமிய நாடுகளும், சீனப் பிரச்சாரமும் உங்களை முற்றிலுமாக விலைக்கு வாங்கிவிட்டன. இப்போது நீங்கள் லாபத்தின் பக்கமே நிற்கிறீர்கள். அவர்கள் விரும்புபவற்றைத் தவிர்த்து வேறு எதையும் நீங்கள் சகித்துக் கொள்வதில்லை. உங்கள் சொந்தப் பேராசைகளுக்கு அடிமையாகி விட்டீர்கள்” என்றார்.
#trump #twitter #tamilthisai #kanganaranut #farmeract #boolywood america #usa