இந்தியா

காங்கிரஸ் கவுன்சிலரின் கண்டுபிடிப்பு: ரம்முடன் தினமும் ஆம்லேட் போதும் கொரோனா ஓடிவிடும்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மங்களூரு:-

தினமும் ரம்முடன் முட்டை, ஆம்லேட் சாப்பிட்டால் கொரோனாவில் இருந்து பூரண குணமடையலாம் என காங்கிரஸ் கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிப்பது மட்டுமே ஒரே வழி என பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு மருந்து தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரம்முடன் முட்டை சாப்பிட்டால் கொரோனா வைரஸில் இருந்து குணம் அடைந்து விடலாம் என கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் மக்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இதுகுறித்து கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உல்லல் (Ullal) முனிசிபல் காங்கிரஸ் கவுன்சிலர் ரவிச்சந்திர கட்டி (Ravichandra Gatti) கொரோனாவை விரட்ட வீட்டு மருத்துவம் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ಕಾಂಗ್ರೆಸ್ ಕೌನ್ಸಿಲರ್​ ರವಿಚಂದ್ರ ಗಟ್ಟಿ ಹೇಳ್ತಾರೆ ನೋಡಿ ಕರೊನಾಕ್ಕೆ ಔಷಧ ಯಾವುದೂ ಅಂತ!

ಒಂದು ಪೆಗ್​ ರಮ್​, ಅದಕ್ಕೊಂದು ಸ್ಪೂನ್ ಪೆಪ್ಪರ್, ಎರಡು ಆಮ್ಲೆಟ್​ ಸೇವಿಸಿದ್ರೆ ಕರೊನಾ ಮಂಗಮಾಯ ಅಂತಿದ್ದಾರೆ ನೋಡಿ ಕಾಂಗ್ರೆಸ್ ಕೌನ್ಸಿಲರ್​ ರವಿಚಂದ್ರ ಗಟ್ಟಿ

Posted by Vijayavani on Friday, July 17, 2020

அந்த வீடியோவில் கையில் ரம் பாட்டிலுடன் தோன்றிய டாக்டர் கவுன்சிலர் நோயாளிகள் தினமும் 60-90 மில்லி ரம்முடன் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் குணமாகி விடலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அத்துடன் மிளகு தூவி இரண்டு முட்டை ஆம்லெட்/ ஆஃப் பாய்ல் சாப்பிட்டால் கொரோனா நோய் மறைந்து ஓடிவிடும் என்று தெரிவித்துள்ளார். 

ALSO READ  பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து; ராகுல் காந்தி ட்வீட் !

பெங்களூரு மற்றும் குடகு பகுதியில் ஏராளமானோர் ரம் அருந்துகிறார்கள். ஆனால் நான் அருந்தியதில்லை. மேலும் நான் மீன் சாப்பிட்டதும் இல்லை. நான் நிறைய மருந்துகளை முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் அவற்றை விட இதில் பலன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவுரை ஒரு அரசியல்வாதியாக அல்லாமல் ஒரு சாதாரண  மனிதராக கூறுவதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ  அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த கிச்சா சுதீப்…. 

இவ்வாறு அரசியல்வாதிகள் கொரோனா வைரஸ் குறித்து புத்திசாலித்தனமாக கூறுகிறோம் என்ற பெயரில் முட்டாள்தனமான கூறுவது முதன் முறை அல்ல. முன்னதாக பாகிஸ்தான் அரசியல்வாதி ஒருவர் நாம் தூங்கினால் கொரோனா வைரஸ் தூங்கும் நாம் இருந்தால் கொரோனவைரஸ் இருக்கும் எனவே நீங்கள் அதிகமாக தூங்குங்கள் என்று கூறியிருந்தார்.

இதேபோல கடந்த மார்ச் மாதம் அசாம் மாநில பிஜேபி எம்எல்ஏ சுமன் ஹரிப்பிரியா மாட்டு சாணம் மற்றும் கோமியம் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. எனவே இவை கொரோனாவுக்கு நல்ல மருந்தாகப் பயன்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் தன் காரையே வீடாக மாற்றிய டாக்டர்…

naveen santhakumar

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் காலிறுதிக்கு தகுதி

News Editor

மோடி எங்களுடைய பிரதமர் : பாகிஸ்தான் மந்திரிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

Admin