இந்தியா

அதிர்ச்சி…!!!!பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையின் உடலில் 100 வெட்டு காயங்கள்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போபால்:

போபாலின் அயோத்தி நகர் பகுதியில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் திங்கள்கிழமையன்று கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலில் 100 இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன, குழந்தையின் சடலம் பிரதே பரிசோதனைக்காக உள்ளூர் போலீசாரால் அனுப்பப்பட்டது.

காலை 7 மணியளவில், அயோத்தி நகரின் ஜி செக்டரில் உள்ள செயிண்ட் தாமஸ் பள்ளிக்கு முன்னால் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் ஒரு பெண் குழந்தை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்தது.குழந்தை சால்வையில் போர்த்தப்பட்டிருப்பதைக் கவனித்த காவல்துறையினர் உடலை பரிசோதித்தபோது, ​​குழந்தையின் மார்பிலும் முதுகிலும் 100 வெட்டு காயங்கள் இருப்பதை அவர்கள் கவனித்தனர். இதைத் தொடர்ந்து,குழந்தையினு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

ALSO READ  ஆப்கானிஸ்தான் ராணுவ சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் :

ஆரம்பத்தில், குழந்தையை இரவில் கோயிலுக்கு அருகில் யாரோ ஒருவர் விட்டு சென்றிருக்கலாம். அப்போது ஏதேனும் விலங்கு குழந்தையை கடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், சிறுமியின் பிரேத பரிசோதனையில் அவர் ஒரு சிறிய ஸ்க்ரூடிரைவர் போன்ற கடினமான பொருளால் பல முறை குத்தப்பட்டார் என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியங்கள் திரட்டி வருகின்றனர்.மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறந்த குழந்தையை கைவிட்ட நபர்களை அடையாளம் காண அந்த பகுதிக்கு அருகில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுவையில் ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; எதிர்க்கட்சி கடிதம்!

News Editor

பாகிஸ்தானின் ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை..

naveen santhakumar

சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்து; நடிகர் ஷாருக்கான் மகன் கைது..!

Admin