இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. ஹரி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இவர் சிங்கம், சாமி, பூஜை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார், அதனை தொடர்ந்து கடைசியாக நடிகர் விக்ரம் யை வைத்து சாமி ஸ்கொயர் என்ற படத்தினை எடுத்து இருந்தார், பின்னர் அந்த படம் நல்ல விமர்சங்கங்களுடன் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து சூர்யா நடிக்க ஞானவேல் ராஜா தயாரிப்பில் “அருவா” என்ற படத்தினை இயக்க ஒப்பந்தமானார், அதன் பிறகு படத்தின் முதல் கட்ட பணிகளையும் தொடிங்கினார் இயக்குனர் ஹரி. ஆனால் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிய ராஜ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதால், இப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை வைத்து புதிய படம் இயக்க உள்ளக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதனை ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. பின்பு படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் தற்போது படக்குழு இறங்கியுள்ளது.
அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்ப்போது நடிகர் அருண் விஜய் அறிவழகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.