உலகம்

விளையாட்டு வினையானது: டீ பாத்திரத்தில் சிக்கிய குழந்தையின் தலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குழந்தையின் தலை டீ பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குழந்தைகள் தன்னிலை மறந்து விளையாடுவார்கள். அவர்களை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை. சில நேரங்களில் வேடிக்கையான சில விஷயங்கள் நிகழ்ந்து விடுகிறது.அதே போல் தான் தற்போது சீனாவை சேர்ந்த 2 வயது குழந்தை டீ போடும் பாத்திரத்தை வைத்து விளையாடி உள்ளது.

ALSO READ  கிறிஸ்துமஸை முன்னிட்டு “வியட்நாம்” செல்ல சிறப்பு சலுகைகள் வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி

அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் தலை டீ பாத்திரத்தினுள் சிக்கிக் கொண்டதால் வீட்டில் உள்ளவர்கள் தீயணைப்பு வீரர்களை தொடர்பு கொண்டுள்ளனர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாத்திரத்தை சிறிய கத்தி மூலம் வெட்டி குழந்தையின் தலையை வெளியே எடுத்து உள்ளனர். தற்போது குழந்தை எந்த ஒரு பாதிப்பும் இன்றி நலமாக உள்ளது.

குழந்தைகள் இதுபோன்ற பொருட்களோடு விளையாடும் போது பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிப்பது அவசியம் ஆனது.தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாலிபரின் மூளையில் இருந்த புழுவை…. ஐந்து வருடங்கள் கழித்து….. வெற்றிகரமாக வெளியில் எடுத்த மருத்துவர்கள்…..

naveen santhakumar

முதன்முறையாக கொரில்லாவுக்கு கண் அறுவை சிகிச்சை

Admin

நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்க இயற்கை தீர்வு… விந்தணுக்களை குடிக்கும் விநோத பெண்..

naveen santhakumar