தமிழகம்

சில்லி சிக்கன் வியாபாரிக்கு சிலிண்டரால் நேர்ந்த கொடூரம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தருமபுரி எஸ்.வி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒரு வீட்டில் திடீரென புகை வருவதைக் கண்ட எதிர் வீட்டில் இருந்த பூ வியாபாரி மணி என்பவர் வீட்டிற்குள் புகுந்து நெருப்பை அணைக்க வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது சிலிண்டர் வெடித்து சிதறியதில் படுகாயமடைந்த மணியை அருகே இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ALSO READ  உலக பெரும் பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம் !

இந்நிலையில் தீப்பிடித்து எரிந்ததில் வீட்டின் மேற்கூரை மற்றும் வீட்டில் இருந்த சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டின் உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தர்மபுரி நகர காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நேரில் பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வீட்டில் குடியிருந்தவர் குட்டி என்பவர் வியாபாரத்திற்கு மட்டும் வாடகைக்கு எடுத்துள்ளார். 

இவர் இரவு நேரங்களில் மீன் மற்றும் சில்லி சிக்கன் வியாபாரம் செய்து வருவதாகவும், அதனால் வீட்டில் 3 சிலின்டர் வைத்துள்ளார். இரவு வியாபாரம் முடித்துவிட்டு சிலிண்டர் மற்றும் மளிகை பொருட்கள் வீட்டில் வைத்து விட்டு தனது சொந்த வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் இன்று சிலிண்டர் கசிவு ஏற்பட்டு வெடித்தில் அருகே இருந்த 3 வீடுகளின் சுவர்கள் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

7 ஸ்டார் ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு – பலர் மருத்துவமனையில் அனுமதி

News Editor

பத்திரிகையாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்த ஸ்டாலின் !

News Editor

சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?

News Editor