சென்னை:-
இன்று கருணாநிதியின் 97-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இதையொட்டி தமிழகத்தில் 5 நலத்திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
திட்டங்கள் விவரங்கள் வருமாறு:-
கொரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 4000 ரூபாயில் 2வது தவணையாக 2 ஆயிரம் வழங்குதல்.
கொரோனா பாதிப்பு நிவாரணமாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பைகள் வழங்குதல்
அறநிலையத் துறையின் கீழ் ஒருகால பூஜையுடன் இயங்கும் 12,959 கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 13 வகை மளிகை பொருட்கள் வழங்குதல்.
கொரோனா தொற்றால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், மருத்துவர், மருத்துவ பணியாளர், காவலர் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசு பயன்களை வழங்குதல் ஆகியவை ஆகும்.