திருமணங்கள் வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டும் நடக்க கூடிய விஷயம். நம் ஊரில் திருமணம் என்றால் சொந்தபந்தங்களை கூட்டி அவர்கள் முன்னிலையில் தன் வாழ்க்கைத்துணையை இனி நம்முடன் வாழ நாம் மனதார உறுதி ஏற்கும் நாள். இந்த நாளில் கொண்டாடட்டமே விருந்தில் தான் இருக்கிறது. உலகம் முழுவதும் திருமணங்கள் என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் திருமணம் முடிப்பார்கள். ஆனால் உலகம் முழுவதும் உள்ள பொதுவான விஷயம் திருமணம் முடிந்ததும் வைக்கப்படும் விருந்து.
திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் உணவு வழங்குவது உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது. சிலர் கஷ்டமான காலங்களில் கடன் வாங்கி திருமணம் முடிப்பார்கள் அவர்களுக்கு உணவு என்பது பெரும் செலவாக இருக்கிறது.இந்நிலையில் சமீபத்தில் ஒரு தம்பதி தங்களது திருமணத்திற்கு வந்த விருந்தினரையே பாத்திரம் கழுவ விட்ட சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து ஒருவர் ரெட்டி தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதன் படி அவருக்கு தெரிந்த தம்பதி “செல்ப் கேட்டர்” முறையில் திருமணத்திற்கு உணவு ஆர்டர் செய்திருந்தனர். அதாவது உணவை ஆர்டர் செய்து டெலிவரி செய்து விடுவார்கள் வீட்டில் உள்ளவர்களே உணவை பரிமாறி கொள்ள வேண்டும். இது பொதுவாக சிறிதாக குடும்பங்களுக்கு இடையே நடக்கும் சந்திப்புகளுக்காக ஆர்டர் செய்யும் முறை திருமண நிகழ்வுகளுக்கு இவ்வாறு ஆர்டர் மாட்டார்கள். ஆனால் சர்வீஸ் முறையில் அர்டர் செய்தால் அதிகம் பணம் செலவாகும் என்ற காரணத்தால் இந்த தம்பதி இவ்வாறு ஆர்டர் செய்துள்ளனர்.
ஆனால் பாத்திரங்களை கழுவாமல் கொடுத்தால் அதற்கு கேட்டரிங் நிறுவனம் எக்ஸ்ட்ரா சார்ஜ் வாங்கிவிடும் அதனால் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களையே அந்த தம்பதிகள் பாத்திரங்களை கழுவி கொடுத்துவிட்டு செல்லும் படி கேட்டு கொண்டுள்ளனர். இந்த அனுபவத்தை அவர் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.