தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வலது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அன்பிற்குரிய மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வராக நீங்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் இந்தவேளையில், நீங்கள் பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
பல நூற்றாண்டுகளாக கேரள மக்களும் தமிழர்களும் பகிர்ந்துகொண்டு வரும் சகோதர அன்பை நாம் மேலும் ஆழப்படுத்துவோம் என்றும், சிறப்பான இந்தியாவிற்காக ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்றும் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.