2020ம் ஆண்டில் அதிக சூழலியல் குற்றங்கள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. 2020ல் சூழலியல் குற்றங்கள் அதிகம் நடந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய அளவில் குற்றங்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டை விட 28% அதிகரித்துள்ளது. அதே 2020 ஆண்டில் சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் 78.1% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மட்டும் சூழலியல் சட்டங்களின் கீழ் 42,756 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம். தமிழ்நாட்டிற்கு அடுத்து ராஜஸ்தானில் சுமார் 9,543 வழக்குகள், அடுத்ததாக உத்தர பிரதேசத்தில் 2,981 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சூழலியல் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படும் ஐந்து வழக்குகளில் நான்கு சிகரெட்டு மற்றும் புகையிலைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.