இந்தியா

500 ரூபாய்க்கு மனைவியை விற்ற கணவர்! அதிர்ச்சி சம்பவம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குஜராத் மாநிலத்தில், தனது மனைவியை 500 ரூபாய்க்கு வேறொரு நபரிடம் கணவன் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் 21 வயதுடைய பெண் ஒருவர் தன் கணவர் தன்னை வேறொரு நபரிடம் 500 ரூபாய்க்கு விற்று விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி மதன் லால் கட்வர்சா கூறியதாவது:

Gujarat woman sold raped

எங்களிடம் இளம்பெண் ஒருவர் புகாரளிக்க வந்தார். அதில், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இரவு 9 மணியளவில் அங்குள்ள லக்கி ஹோட்டலுக்கு அப்பெண் தன் கணவர் தீரஜ் ஜாங்கிட் உடன் சென்றுள்ளார்.

அங்கு வந்த சோனு சர்மா என்பவரிடம் தன் கணவர் 500 ரூபாயை பெற்றுக் கொண்டு, அந்த நபருடன் பெண்ணை போக சொல்லி உள்ளார்.

ALSO READ  சிறார் ஆபாச படம்- 3 இளைஞர்கள் கைது!

ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான பகுதிக்கு கூட்டிச் சென்ற சோனு சர்மா அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் தெரிவித்து உள்ளார் என்று கூறினார்.

இந்த புகாரை அடுத்து பெண்ணின் கணவர் தீரஜ் ஜாங்கிட் மற்றும் சோனு சர்மாவை அடுத்த 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

ALSO READ  குறும்படத்தை இயக்க தயாராகும் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி...

பாதிக்கப்பட்ட பெண் சிகார் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வெறும் 500 ரூபாய்க்காக மனைவியை கணவர் வேறொரு நபருக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜிகா வைரஸ் என்றால் என்ன? எப்படி பரவுகிறது ?

naveen santhakumar

சேவை கட்டணத்தை உயர்த்தும் BSNL நிறுவனம்

Admin

JEE, NEET பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை; மத்திய அமைச்சகம் அதிரடி!  

News Editor