தமிழகம்

3 பேருடன் திருமணம்…கையில் குழந்தை…யார் தான் அப்பா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராமநாதபுரம் அருகே 8 மாத குழந்தையை விற்றதாக பெண் மீது இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகேயுள்ள கோரவல்லி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையை சட்டவிரோதமாக விற்றதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரித்ததில் பல உண்மைகள் வெளிவந்தன. அதில் அப்பெண்ணுக்கு 3 முறை திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது.

மேலும் தான் வசித்து வரும் பகுதியில் உள்ள நபரை முதலிலும், இரண்டாவதாக கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் ஒருவரையும், 3வதாக மாற்றுத்திறனாளி ஒருவரையும் அப்பெண் திருமணம் செய்துள்ளார்.

ALSO READ  பிரபல தயாரிப்பாளரா, ருத்ரா படத்தின் இயக்குநர்..!

ஆனால் குழந்தையை விற்று விட்டதாக புகாரளித்த நபர் 4வதாக அப்பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், குழந்தை யாருடையது என்பதை டி.என்.ஏ. பரிசோதனை செய்து பார்க்கும் வரை குழந்தைகள் நல காப்பகத்தில் இருக்கும் என கூறி அழைத்து சென்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுக்கோட்டையில் பரபரப்பு; கல்லூரி மாணவி குத்தி கொலை !

News Editor

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; தமிழகம் வரும் உயர்மட்ட குழு !

News Editor

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… கார், பைக், கறவை மாடு வென்ற வீரர்கள்!

naveen santhakumar