ராமநாதபுரம் அருகே 8 மாத குழந்தையை விற்றதாக பெண் மீது இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகேயுள்ள கோரவல்லி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையை சட்டவிரோதமாக விற்றதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரித்ததில் பல உண்மைகள் வெளிவந்தன. அதில் அப்பெண்ணுக்கு 3 முறை திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது.
மேலும் தான் வசித்து வரும் பகுதியில் உள்ள நபரை முதலிலும், இரண்டாவதாக கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் ஒருவரையும், 3வதாக மாற்றுத்திறனாளி ஒருவரையும் அப்பெண் திருமணம் செய்துள்ளார்.
ஆனால் குழந்தையை விற்று விட்டதாக புகாரளித்த நபர் 4வதாக அப்பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், குழந்தை யாருடையது என்பதை டி.என்.ஏ. பரிசோதனை செய்து பார்க்கும் வரை குழந்தைகள் நல காப்பகத்தில் இருக்கும் என கூறி அழைத்து சென்றனர்.