தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஐடா புயல் காரணமாக நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி நகரங்களில் பெரும்சேதம் ஏற்பட்டுள்ளது. 40ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அங்குள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளன. 15 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ததால் அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களும் பெருத்த சேதமடைந்துள்ளன.
கொட்டித்தீர்த்த கனமழையால் விமான நிலைய வளாகம் குளம் போல் காட்சியளிக்கிறது.
அதே போல் மெட்ரோ ரயில் நிலையங்கங்களில் தண்ணீர் வேகமாக செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மெட்ரோ ரயில் நிலைய மேற்கூரைகளில் இருந்து அருவிகள் போல் கொட்டும் மழை நீரையும், மழை நீரை அதிவேகத்தில் ரயில்கள் கடந்து செல்லும் காட்சிகளையும் அமெரிக்க செய்தியாளர் டேவிட் பெக்னாட் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சி.திவ்யதர்ஷினி
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.