அடுத்த பத்தாண்டுகளில் நம் வாழ்வையே மாற்றி அமைக்க வரும் டாப் 5 தொழில்நுட்பங்கள்
இன்டெர்நெட் டிவி (Internet TV)
இனி ஸ்மார்ட்போனிலேயே அத்தனையையும் பார்க்கலாம். 2022-ல் இன்டெர்நெட் ட்ராபிக் 77 சதவிகிதம் அதிகரிக்கும்.
க்வான்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing)
ஒரு கணினி 10 ஆயிரம் ஆண்டுகளில் செய்யும் ஒரு வேலையை க்வான்டம் கம்ப்யூட்டிங் வெறும் 200 விநாடிகளில் செய்து முடித்துவிடும். இந்தத் தொழில்நுட்பம் மருத்துவம், ஆற்றல், சுற்றுச்சூழல், ஸ்மார்ட் பொருட்கள் ஆகிய பிரிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தானியங்கி எலெக்ட்ரிக் கார்கள் (Automatic Electric Car)
உலக அளவில் கனெக்டட் கார்களுக்கள் ஆண்டுக்கு 27.5 சதவிகித வளர்ச்சியில் உள்ளது. இத்துறையில் டெஸ்லா நிறுவனம் அமைத்துக்கொடுத்த வழி அடுத்த 10 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையை மாற்றுப் பாதையில் கொண்டுசெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி கனெக்டட் வீடுகள் (5G Connected Home)
2025-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 75 பில்லியன் IoT சாதனங்கள் நிரம்ப உள்ளன. இந்தத் தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும். உங்கள் இல்லத்தில் உள்ள அத்தனை சாதனங்களையும் உங்களது விரல் நுனியில் இயக்கலாம்.
குரல் (Voice Technology)
தற்போதே வாய்ஸ் தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்தனை சாதனங்களையும் உங்கள் குரலால் கட்டுப்படுத்தலாம். அல்கெசா, கூகுள் ஹோம், சிரி என அத்தனைக்கும் வாய்ஸ் தொழில்நுட்பம்தான்.