பிரபல நிறுவனமான ஜியோ 336 நாட்களுக்கு புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனமான ஜியோ அவ்வப்போது தனது ரீசார்ஜ் திட்டங்களை மாற்றி வந்தது. ரூ.222ல் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்கான ஆஃபர் ஒன்றை திடீரென ரூ.199 ஆக குறைத்தது.
2020ம் ஆண்டையொட்டி ரூ.2020 என்ற வருடாந்திர பிளானை அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் புதிய ரீசார்ஜ் பிளான் ஒன்றை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.1,121 என்ற மதிப்பில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, ஜியோ – ஜியோ அன்லிமிடெட் கால், மற்ற நிறுவனங்களுக்கு 12000 ஐயுசி நிமிடங்கள், 100 எஸ்.எம்.எஸ். இலவசம், மற்ற ஜியோ செயலிகளை பயன்படுத்துவது இலவசம் என வழக்கமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
நிச்சயம் இந்த வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அனைவரிடத்திலும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.