பிரபல தெலுங்கு நடிகர் ராணா, போலீஸ் அதிகாரி கேரக்டருக்காக முழுமையான பயிற்சி எடுக்கப் போகிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்தனர். இந்தி படங்களில் நடித்துவரும் ராணா, சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இப்போது விரதபர்வம் 1992 என்ற படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சாய் பல்லவி அவர் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். வேணு உடுகுலா இயக்கும் இந்தப் படத்தில் நந்திதா தாஸ், பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
ஸ்பெஷல் பயிற்சி இதற்கு முன் சில படங்களில் ராணா, போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தாலும் நிஜ போலீஸ் அதிகாரியாகவே மாற வேண்டும் என்பதற்காக, ஸ்பெஷல் பயிற்சி எடுக்க இருக்கிறார். தற்காப்பு, விதவிதமான துப்பாக்கிப் பயிற்சி, உடல் மொழி உட்பட அனைத்துவிதமான பயிற்சிகளையும் அவர் எடுக்க இருக்கிறார். ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரிகள் இந்தப் பயிற்சியை அவருக்கு அளிக்க உள்ளனர் என்று படக்குழு தெரிவித்துள்ளது.