நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளராக களமிறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
“இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
“மகாநதி” படம் இவருக்கு பேரையும், புகழையும் பெற்றுத்தந்தது. இந்த படத்தில் இவரது நடிப்புத் திறமை அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் சிறந்த நடிப்புக்காக “தேசிய விருது” இவருக்குக் கிடைத்தது.
மேலும்,இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளராக களமிறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம், வெப் தொடர் ஒன்றைத்(web series) தயாரிக்க கீர்த்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வெப் தொடரின்(web series) கதையைக் கேட்டதும் கீர்த்திக்கு பிடித்துவிட்டதாம்.அதனால், அதை அவரே தயாரிக்க முடிவெடுத்துள்ளாராம். ஆனால் இதில் அவர் நடிப்பாரா??? அல்லது தயாரிப்பு மட்டுமா??? என்பது தெரியவில்லை. எனினும் விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.