சினிமா

அருகருகே இருந்தும் காதலனை பார்க்க முடியாத ஏக்கத்தில் நயன்தாரா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹைதராபாத்:

ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பானது கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து வருகிறதாம்.

படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவரும் ஒரு பயோ பபுளுக்குள் இருக்கிறார்களாம்.கடந்த IPL தொடரில் பின்பற்றப்பட்ட அதே பயோ பபுள் ஏற்பாடுகள்தான் ‘அண்ணாத்த’ டீமிற்கும் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சங்கவி.. 

அந்த பயோ பபுளில் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு அந்த ஓட்டல், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது.அதேபோல் பயோபபுளில் இருப்பவர்கள் யாரும் வெளியேபோய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது.

இந்த பயோபபுள் முறையால் நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனை பார்க்க முடியாமல் தவித்து வருகிறாராம். விக்னேஷ் சிவன் இயக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகிறது.ஒரே ஊரில் இருந்தும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள முடியவில்லையாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எப்பா என்ன ஒரு லுக் : ராயல் கருப்பு உடையில் தீபிகா

Admin

பிரபல பாலிவுட் நடிகை கர்ப்பம்: ரசிகர்கள் மகிழ்ச்சி!

Shanthi

இந்தியன் 2 அப்டேட்: ஓராண்டாகியும் தொடங்கப்படாதா படப்பிடிப்பு; காரணத்தை வெளியிட்ட காஜல் !

News Editor