சினிமா

அருண் விஜய் படத்துடன் இணைந்த பிரகாஷ் ராஜ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. ஹரி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில்  ஒருவர். இவர் சிங்கம், சாமி, பூஜை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார், அதனை தொடர்ந்து  கடைசியாக   நடிகர் விக்ரம் யை வைத்து சாமி ஸ்கொயர் என்ற படத்தினை எடுத்து இருந்தார், பின்னர் அந்த படம் நல்ல விமர்சங்கங்களுடன் வெற்றி பெற்றது.  

ALSO READ  பிக்பாஸ்ஸில் நடிகை ப்ரியா பவானிசங்கர்?

அதனை தொடர்ந்து சூர்யா நடிக்க ஞானவேல் ராஜா தயாரிப்பில் “அருவா” என்ற படத்தினை இயக்க ஒப்பந்தமானார், அதன் பிறகு படத்தின் முதல் கட்ட பணிகளையும் தொடிங்கினார் இயக்குனர் ஹரி. ஆனால் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிய ராஜ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதால், இப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  

இதனை தொடர்ந்து இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை வைத்து புதிய படம் இயக்கவுள்ளார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘அருண் விஜய் 33’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் ‘மாஃபியா’ படத்தில் இணைத்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  கார்த்தியுடன் நடிக்கும் கர்ணன் படத்தின் நாயகி !

இந்நிலையில் படக்குழு ‘அருண் விஜய் 33’ படத்தின் அப்டேட்டை  வெளியிட்டுள்ளது படக்குழு . அதில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டுள்ளது. முதல் கட்ட பணிகளை முடித்துவிட்டு முன்பே அறிவித்தது போல அடுத்த மாதம் படப்பிடிப்பை துவங்கவுள்ளது படக்குழு. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல வில்லன் நடிகர் காலமானார்!

News Editor

கேரளாவில் தோல்வியை தழுவியதா தர்பார்?

Admin

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பிரபலங்கள்..!

News Editor