ஆனந்த் ஷங்கர் தமிழில் இருமுகன்,நோட்டா, அரிமா நம்பி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார் இவர் தற்போது நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரையும் வைத்து எனிமி என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருநாளினி ரவி நடித்து வருகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தமன் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் “அவன் இவன்” திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலும் , ஆர்யாவும் இணைந்து நடித்திருந்தனர். “அவன் இவன்” படத்தில் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.
அப்படத்திற்கு பிறகு தற்போது நடிகர் விஷாலும் ஆர்யாவும் இணைந்து “எனிமி” படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் விஷால் மற்றும் ஆர்யா இருவர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஹைதரபாத்தில் முடித்த படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் துபாய் சென்றது. அங்கு படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் தற்போது முடித்துள்ளது. இதனையடுத்து படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை இந்தியாவில் படமாக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
#Enemy #Tamilmovie #TamilThisai #Cinema #Vishal #Arya #Cineupdate #Cinemanews #MirnaliniRavi #MamthaMohandas #AnandhSankar