பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் G.
இவர் தற்போது ‘திரௌபதி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த வாரம் இத்திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இத்திரைப்படத்தில் அஜீத் மைத்துனர் ரிஷி ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை காண பெருமளவில் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திரௌபதி படத்தின் முதல் மூன்று நாள் கலக்ஷன் குறித்து தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் இத்திரைப்படம் முதல் மூன்று நாட்களில் சுமார் 7 கோடிக்கு மேல் கலக்ஷன் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையை காட்டிலும் விழுப்புரம், கோவை, சேலம், மதுரை, திருச்சி ஏரியாக்களில் நல்ல கலக்ஷனை எடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
க்ரௌடு ஃபண்டிங் (Crowd Funding) முறையில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் இவ்வளவு கலக்ஷன் பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.