சென்னை:-
உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஐம்பதாவது படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் நூறாவது படமான ‘ராஜபார்வை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார் கமல். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ராஜ்கமல் ஃபில்ம்ஸ்’ என்று பெயரிட்டார். ‘விக்ரம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘தேவர் மகன்’, ‘ஹே ராம்’, ‘விருமாண்டி’, ‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார் கமல்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இதுவரை 47 படங்கள் வெளியாகி உள்ளது இதில் 48 வது படமாக கமலஹாசன் நடிப்பில் தலைவன் இருக்கிறான் படம் உருவாகி வருகிறது 49 வது படமாக சிறிய பட்ஜெட் படம் ஒன்றை தயாரிக்க உள்ளார் கமல். இந்நிலையில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் ஐம்பதாவது படத்தை பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் கமல். இதுகுறித்து ரஜினிகாந்தை அணுகியுள்ளார் கமலஹாசன் அதற்கு ரஜினியும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வர உள்ளது. அதற்கு அடுத்ததாக தனது கால்ஷீட்டை ராஜ்கமல் நிறுவனத்திற்கு கொடுக்க உள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து இதுவரை 16 படங்களில் நடித்துள்ளனர் இருவரும் கடைசியாக 1985 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான Geraftaar இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ‘தில்லு முல்லு’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ரஜினி – கமல் இணைந்து நடித்திருப்பார்கள். தற்போது உருவாகவுள்ள இந்தக் கூட்டணி படத்தில் கூட ரஜினியுடன் கமல் ஒருசில காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.