ஹைதராபாத்:-
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘கீதா கோவிந்தம்’ இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் மகேஷ் பாபு. தனது தந்தை கிருஷ்ணாவின் 77வது பிறந்த நாளன்று, இதனை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்தார்.
‘சர்காரு வாரி பாட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிக்க பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக இதில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். மகேஷ் பாபுவுடன் கீர்த்தி நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் வங்கி ஊழியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒளிபதிவாளராக PS வினோத் ஒப்பந்தமாக்கிய உள்ளார். இப்படத்தை Mythri Movie Makers, 14 Reels Entertainments உடன் இணைந்த மகேஷ் பாபுவின் GMB Entertainments தயாரிக்கிறார்கள்.
அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு, ராஷ்மிகா மந்தனா, விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கல் விடுமுறைக்கு வெளியான ‘சரிலேரு நீக்கெவரு’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.