சினிமா

திரையரங்கை விட்டு ஓடிடிக்கு சென்ற திரைப்படம்; ‘கர்ணன்’ பட நடிகை அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன் இத்திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பிற்கு இணையாக ராஜீஷா விஜயன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

நடிகை ராஜீஷா விஜயன் மலையாளத்தில் கடந்த 2016 வெளியான அனுராக கரிக்கின் வெள்ளம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பால் மலையாள சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். மேலும் நடித்த முதல் படத்திலே மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார். 

இந்நிலையில் நடிகை ராஜீஷா விஜயன் ஒரு முக்கிய அறிவிப்பை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில், மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவாகி இருந்த ‘கோ கோ’ படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்று வந்த இப்படம், தற்போது திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஜிஷா தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ALSO READ  தொடரும் போராட்டம்; வேளாண் மசோதாக்களை எரித்து ஹோலி கொண்டாடிய விவசாயிகள் !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராஷ்மிகாவுக்கு நன்றி சொன்ன ரித்திக் ரோஷன்

Admin

“உன் விழிகளில் விழுந்த நாள் முதல்” – நடிகை சிருஷ்டி டங்கே புகைப்பட தொகுப்பு

Admin

மீண்டும் இணையும் கொம்பன் பட கூட்டணி !

News Editor