சென்னை:-
மது கிடைக்காத விரக்தியில் மறைந்த நடிகை மனோரமாவின் மகன் அதிகளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு உட்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை மனோரமா. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் கலக்கிய இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மறைந்தார்.
அவரது ஒரே மகன் பூபதி. இவர் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபான கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.
இதனால் மது கிடைக்காத விரக்தியில் நடிகை மனோரமாவின் மகன் பூபதி அதிக அளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உள்ளார். இதையடுத்து உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் திரை துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சமீபகாலமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மது கிடைக்காத சிலர் விரக்தியில் ஹேண்ட்-சனிடைசர்கள், தின்னர்கள் போன்றவற்றை மதுவிற்கு பதிலாக அருந்தி உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.