சமீபகாலமாக நாக சைதன்யா சமந்தா விவகாரத்து தொடர்பான செய்திகள் உலா வந்த நிலையில் இருவரும் பிரிவது தொடர்பாக வெளிப்படையாக தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருந்தாலும் இருவரும் அது தொடர்பாக முழுமையான விளக்கம் எதுவும் தரவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக திருப்பதி கோவிலுக்கு சென்று இருந்த நடிகை சமந்தாவிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார் அதற்கு நடிகை சமந்தா கோவிலில் கேட்கும் கேள்வியை இது என்று கோவமாக பதில் அளித்தார்.
மேலும், நாளுக்கு நாள் தனது விவாகரத்து குறித்த வதந்திகள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இதனை தடுப்பதற்காக நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக சமந்தா கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் ஒருவழியாக தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதை சமூகவலைதளங்களின் வாயிலாக அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் தங்களது ரசிகர்களும், அபிமானிகளும், ஊடகத்தினரும் தங்களுக்கு துணையாக இருக்கும்படியும், தங்களுக்கான ப்ரைவசியை அளிக்குமாறும் கூறியுள்ளனர்.