வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதை பற்றி விளக்கமளித்துள்ளார் நடிகை நயன்தாரா.
தென்னிந்திய சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். இயக்குனர் சசி கணேசன் வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க முடிவு செய்தார். இதில் வேலுநாச்சியார் கதாபாத்திரத்திற்கு ஏற்ற கதாநாயகியை இயக்குனர் சுசி கணேசன் தேடி வந்த நிலையில் நடிகை நயன்தாராவை வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது நயன்தாரா தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்,
”ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று ஊடகங்களில் சில தகவல்கள் பரவி வருகின்றன. நயன்தாரா அப்படத்தில் திட்டவட்டமாக நடிக்கவில்லை. அவரது கருத்தை நாங்கள் இந்த அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு பகிர்கிறோம். இது ஒரு ஆதாரமற்ற வதந்தி. ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.