கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் “ஓ மை கடவுளே” . இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்திருந்தார். மேலும், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.
ஒரு புதிய கதைக்களத்தில் காமெடி சேர்த்து இயக்கிருந்தார் அஸ்வத் மாரிமுத்து, அதனை தொடர்ந்து இவர் அடுத்து எந்த மாதிரியான திரைப்படத்தினை இயக்கப்போகிறார் என்று அனைவரிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்நிலையில்தான் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தான் இயக்கம் அடுத்தபடத்தினை பற்றிய அறிவிப்பினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ” இன்று ‘ஓ மை கடவுளே’ படத்தின் தெலுங்கு ரீமேக் படம் பூஜையுடன் துவங்கப்பட்டது.
அதனை தெலுங்கில் இயக்கவுள்ளேன் என்றும், எனது படத்திற்கு நல்ல வரப்பரப்பு கொடுத்த தமிழ் ரசிகர்களுக்கும் என் நன்றினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். அதனையடுத்து, இந்த படம் முடித்த அப்பிறகு நான் இயக்கும் அடுத்த தமிழ் படத்தின் அப்டேட்டை தருகிறேன்” என்று அவர் பதிவிட்டிருந்தார். அத்துடன் படத்தின் பூஜையில் எடுக்க பட்ட புகைப்படங்களையும் சேர்த்து பதிவிட்டு இருந்தார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் கடவுள் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியே நடிக்கவிருக்கிறார். அவரை தொடர்ந்து அசோக் செல்வன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் நடிக்கவுள்ளார். இந்நிலையில் “ஓ மை கடவுளே” படத்தினை பார்த்துவிட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.