இயக்குநர் வெற்றிமாறன் அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கயுள்ளார். இதில் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறு கதையை மையமாக வைத்தது உருவாகவுள்ள படத்தினை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். அதனையடுத்து இப்படத்தினை சத்தியமங்கலம் வனப்பகுதியில் படமாக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
படத்தின் முதல் கட்ட பணிகள் அணைத்து,ம் இறுதி கட்டத்தினை எட்டியுள்ளதால் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. இனிநிலையிதான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இயக்குநர் பாரதிராஜா படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குளிர்காலம் துவங்கியுள்ளதால் தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஆடுகளம் வடசென்னை போன்ற படங்களில் நடித்த கிஷோர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.