சினிமா

“பா வேந்தன்” எஸ்.பி.பி.யின் 75-வது பிறந்தநாள்…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75வது பிறந்தநாள் இன்று.


இந்திய திரையுலகில் பின்னணி பாடகர்களுக்கென ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. முஹம்மது ராஃபி, கிஷோர் குமார், ஆஷா போஸ்லே, கே.ஜே. ஏசுதாஸ், டி.எம். சௌந்தர்ராஜன், எஸ். ஜானகி, லதா மங்கேஷ்கர் என நீளும் புகழ்பெற்ற வரிசையில் முன்னணி சில பெயர்களில் இடம்பெறத் தக்கவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் எனப்படும் ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம்.

ஆயிரம் நிலவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு, சங்கீத மேகம், மண்ணில் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூட்டுமோ, காட்டுக்குள்ள மனசுக்குள்ள, நான் போகிறேன் மேலே மேலே, நான் தான் இனிமேலு வந்து நின்னா தர்பாரு என, அரைநூற்றாண்டுக்கு மேலாக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த இந்த காந்த குரலில் தான், காதல், நட்பு, சோகம் என எல்லா உணர்வுகளையும் ரசிகர்கள் மனதில் புகுத்தியது.

ALSO READ  ஏ.ஆர். ரகுமான் தாயார் காலமானார்..!

அந்தக் குரலின் பெயர் SPB எனும் மூன்று மந்திர எழுத்து. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான எம்.ஜி.ஆர்.க்கு முதல் முதலில் ஒலித்த இந்த குரல், பின்னாட்களில் ஒரு சூப்பர் ஸ்டாரையே உருவாக்கியது.

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பி, தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றைக் குரலாக ஒலித்தவர். 

40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பி., உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனையையும் தன்வசம் கொண்டுள்ளார்.

இதுவரை எஸ் பி பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வெவ்வேறு மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது அவரின் பன்மொழி திறனுக்கு சான்று.

சங்கீதத்தில் கை தேர்ந்த ஞானம் பெற்ற எஸ்.பி.பி., இசையமைப்பாளராகவும் தன்னுடைய முத்திரையை தமிழ் சினிமாவில் வலுவாக பதித்தார். 1991 ஆம் ஆண்டு எஸ்.பி.பி, இசையமைத்து நடித்து வெளியான ‘சிகரம்’ திரைப்படத்தில் நடிப்பு இசை என இரண்டு துறைகளிலுமே தனது புலமையையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தியிருப்பார்.

ALSO READ  மறைந்த பாடகர் எஸ்.பி.பி., பிவி சிந்து உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் - குவியும் வாழ்த்துகள்!

கேளடி கண்மணி திரைப்படத்தில் மண்ணில் இந்த காதலன்றி பாடலையும், அமர்க்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலையும் மூச்சுவிடாமல் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை வென்றுள்ள எஸ்.பி.பி, தலைமுறைகள் கடந்தும் தன்னை தகவமைத்துக் கொண்டு, இளம் இசையமைப்பாளர்களிடன் நட்புடன் பழகி தனது குரலை ரசிகர்கள் மனதில் தொடர்ந்து பதிய வைத்த வண்ணம் இருந்தார்.

அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக தமிழ்சினிமாவை ஆண்ட எஸ்.பி.பி.யின் மாயஜால குரல் காற்றில் கரைந்தது… இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்.. என அவரது  குரல் ரசிகர்களின் காதுகளில் ரிங்காரமாக கேட்டுகொண்டுதான் இருக்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெப் தொடர் பக்கம் களமிறங்கிய பிக்பாஸ் புகழ் ஓவியா….

Shobika

தளபதி படம்….உருவாக்க பட்ஜெட் வெறும் 7 கோடி….. வசூல் 40 கோடி…..

naveen santhakumar

“கர்ணன்” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

News Editor