மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். இப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, சரத்குமார், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தினை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முன்னரே படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனையடுத்து கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பினை நடத்தி வருகிறது படக்குழு.இந்த நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடனக் கலைஞர் பிருந்தா கோபால் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில், “இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#ponniyinselvan #maniratnam #vikram #trisha #karthi #jeyamravi #tamilcinema #tamilmovie #tamilthisai