ஆனந்த் ஷங்கர் தமிழில் இருமுகன்,நோட்டா, அரிமா நம்பி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார் இவர் தற்போது நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரையும் வைத்து எனிமி என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருநாளினி ரவி நடித்து வருகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தமன் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷால் ஆர்யா நடடிப்பில் வெளியான அவன் இவன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் எனிமி படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஹைதரபாத்தில் முடித்த படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் துபாய் சென்றது. அங்கு படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் தற்போது முடித்துள்ளது. இதனையடுத்து படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் எனிமி படத்தின் டீசரை வெளியிடவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் வினோத் கூறியுள்ளார்.
#Enemy #Tamilmovie #TamilThisai #Cinema #Vishal #Arya #Cineupdate #Cinemanews #MirnaliniRavi #MamthaMohandas #AnandhSankar