மும்பை:-
ஊரடங்கு உத்தரவால் தொழில் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் 6.9 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பாதிப்படைந்துள்ள திரைத்துறையை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் (Federation of Western Indian Cine Employees (FWICE)) 23 ஆயிரம் பேருக்கு தலா 3 ஆயிரம் வீதம் மொத்தம் 6.9 கோடி ரூபாய் அளித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அமைப்பின் தலைவர் B.N.திவாரி:-
திரைத் துறையைச் சேர்ந்த 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா 3,000 வீதம் 6.9 கோடி ரூபாய் சல்மான் கான் அவர்கள் கொடுத்துள்ளார். அதேபோல் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனமும் ரூபாய் 5000 வீதம் 3000 தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். மும்பை மட்டுமல்லாது ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, பெங்களூர்- வை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் அளிக்க உள்ளார்.
அஜய் தேவ்கன், ரோஹித் ஷெட்டி, போனிகபூர் மற்றும் அனில் கபூர் ஆகியோரும் தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளித்துள்ளனர் என்றார்.